• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இனப்பிரச்சினைக்கான தீர்வினை புதிய ஜனாதிபதி வழங்குவார்- ஜனநாயக பேராளிகள் கட்சி நம்பிக்கை!

நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி நாட்டை கட்டியெழுப்புவதே சர்வகட்சி அரசாங்கமொன்றின் நோக்கம் – ஜனாதிபதி!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/05
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
75 1
A A
0
39
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

22வது அரசியலமைப்பு திருத்த வரைபு தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவதே சிறந்தது எனவும் அதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும்  ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவற்றின் தலைவர்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு அரச சேவையில் இருந்து அதி வினைத்திறன் வாய்ந்த சேவை தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

துறைசார் கண்காணிப்புக் குழுக்களின் தலைவர்களை அமைச்சரவைக்கு அழைக்க தாம் தயார் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான ஆலோசனைக்கு மதிப்பளித்ததற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு, நன்றி தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, சர்வகட்சி அரசாங்கத்திற்கு தமது கட்சி பூரண ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீ.ல.சு. கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து இதனை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் கோரிய மாற்றம் தற்போது இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க சுட்டிக்காட்டியதுடன், சுனாமியின் போதும் யுத்த வெற்றியின் போதும் கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களை தற்போது கைவிடாமல் நாட்டை சரியான பாதையில் மீண்டும் கொண்டு செல்வதற்கு  நடவடிக்கை எடுப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி ஆட்சிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட 11 ஆலோசனைகள் அடங்கிய வேலைத்திட்டமும் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 10 வருடங்களுக்கு ஏற்ற பொருளாதாரத் திட்டத்தை வகுக்க அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியும், பசியும் போராட்டக்காரர்களின் ஆரம்பத்திற்கு வழிவகுத்தது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, போராட்டக்காரர்கள் கடைசி நேரத்தில் வன்முறையுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அன்று நாடாளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாக்காவிட்டால் இன்று ஜனநாயகம் பற்றி இவ்வாறு ஒன்றிணைந்து கலந்துரையாட வாய்ப்பே இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அது ஒருபோதும் மாறவே கூடாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட டலஸ் அழகப்பெரும, முறையான சர்வகட்சி அரசாங்கத்துக்கான பேச்சுவார்த்தைக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சரித ஹேரத் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகார ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related

Tags: சர்வகட்சிஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்!

Next Post

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – பல புகையிரத சேவைகள் இரத்து!

Related Posts

அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!
இலங்கை

அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!

2026-01-13
வடமராட்சி கடலில் அதிகளவாக இறால்..!
இலங்கை

வடமராட்சி கடலில் அதிகளவாக இறால்..!

2026-01-13
பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு ரஷ்யர்கள் மீட்பு!
இலங்கை

பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு ரஷ்யர்கள் மீட்பு!

2026-01-13
அத்துமீறிய மீன்பிடி; 10 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை

அத்துமீறிய மீன்பிடி; 10 இந்திய மீனவர்கள் கைது!

2026-01-13
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-01-13
கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இலங்கை

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2026-01-12
Next Post
கொழும்பு- கண்டி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - பல புகையிரத சேவைகள் இரத்து!

ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு எதிராக யாழில் போராட்டம்!

ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு எதிராக யாழில் போராட்டம்!

நெதர்லாந்து அணிக்கெதிரான முதல் ரி-20இல் நியூஸிலாந்து வெற்றி!

நெதர்லாந்து அணிக்கெதிரான முதல் ரி-20இல் நியூஸிலாந்து வெற்றி!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
இலங்கைக்கு ஒரு பெருமையான தருணம்!

இலங்கைக்கு ஒரு பெருமையான தருணம்!

0
அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!

அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!

0
வடமராட்சி கடலில் அதிகளவாக இறால்..!

வடமராட்சி கடலில் அதிகளவாக இறால்..!

0
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

0
பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு ரஷ்யர்கள் மீட்பு!

பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு ரஷ்யர்கள் மீட்பு!

0
அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!

அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!

2026-01-13
இலங்கைக்கு ஒரு பெருமையான தருணம்!

இலங்கைக்கு ஒரு பெருமையான தருணம்!

2026-01-13
வடமராட்சி கடலில் அதிகளவாக இறால்..!

வடமராட்சி கடலில் அதிகளவாக இறால்..!

2026-01-13
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

2026-01-13
பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு ரஷ்யர்கள் மீட்பு!

பலத்த நீர் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரு ரஷ்யர்கள் மீட்பு!

2026-01-13

Recent News

அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!

அரசியலுக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் – அன்னராசா காட்டம்!

2026-01-13
இலங்கைக்கு ஒரு பெருமையான தருணம்!

இலங்கைக்கு ஒரு பெருமையான தருணம்!

2026-01-13
வடமராட்சி கடலில் அதிகளவாக இறால்..!

வடமராட்சி கடலில் அதிகளவாக இறால்..!

2026-01-13
கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

கிளிநொச்சி முரசு மோட்டை பகுதியில் கோர விபத்து

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.