மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிஓடை வண்ணாத்தி ஆற்றில் மீன்பிடிக்க சென்ற விவசாயி, முதலையினால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தம்பாலம்வெளி கொடுவாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சடாசிவம் சிவபாபு என்பவரே இவ்வாறு சடலமாக நேற்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டார்.
மாவடி ஓடை பகுதியில் வேளாண்மைக்கு காவல் காக்க அமைக்கப்பட்ட குடிசையில் இருந்து வேளாண்மை காவல் காத்வந்து சடாசிவம் சிவபாபு, அருகிலுள்ள வண்ணாத்திவில் ஆற்றில் மீன்பிடிப்பதற்காக கடந்த 26ஆம் திகதி பகல் இறங்கிய போது அவரை முதலை இழுத்துச் சென்றதாக அறியமுடிகின்றது.
இதனையடுத்து அம்பாறை ஒலுவில் கடற்படையினரின் உதவியுடன் பொலிஸார் ஆற்றில் காணாமல் போனவரை நேற்று புதன்கிழமை மாலை தேடிவந்த நிலையில் முதலையால் கை கால்கள் கடிக்கப்பட்ட நிலையில் சடலத்தை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர்.
அவரது உடல் பிரத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
















