• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
25,000 இராணுவத்தினர் பணியில் இருந்து வெளியேறியுள்ளனர் – சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா

Ilango Bharathy by Ilango Bharathy
2024/08/09
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

”தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தது போல, தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டிலிருந்து இலஞ்சம், மற்றும் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்” என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி மற்றும் கட்சியின் களனி அமைப்பாளர் பதவிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் சுயாதீன வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். இந்நாட்டின் கட்சி அரசியல் என்பது ஊழல், மோசடிகளால் நிரம்பியுள்ளது என்பதை நான் பல தடவைகள் கூறியுள்ளேன்.

கட்சி அரசியல் என்பது ஜனநாயக ரீதியாக இருக்க வேண்டும். ஆனால், எமது நாட்டில் மோசடியாளர்கள்தான் கட்சிகளை வழிநடத்தி செல்கிறார்கள். இந்தக் கட்சிகளில் உள்ள பெரும்பாலானோரும் மோசடியாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஏனைய உறுப்பினர்களுக்கு நாட்டை வழிநடத்தும் அளவுக்கு போதிய அறிவும் தெளிவும் திட்டங்களும் கிடையாது. நான் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் இன்று விலகியுள்ளேன். எனினும், எனக்கு வாக்களித்து நாடாளுமன்றுக்கு அனுப்பிய களனி மக்களுக்காக தொடர்ந்தும் சேவை செய்தத்  தயாராகவே உள்ளேன்.

நாட்டை வழிநடத்தக்கூடிய சரியான தலைவரை மக்கள் இம்முறை தெரிவு செய்ய வேண்டும்.
இராஜதந்திர ரீதியாக தலைமைத்துவம் வகிக்கக்கூடிய ஒருவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக நான் பெரும் பங்காற்றியிருந்தேன். எனினும், இந்தக் கட்சியின் தலைவரின் செயற்பாடுகள் தொடர்பாக என்னால் திருப்தியடைய முடியாது.
பொருளாதார நெருக்கடி காலத்தில், அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு வந்தபோது, நான் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அவருக்கு வலியுறுத்தினோம்.

ஆனால், சிறுபான்மையான உறுப்பினர்களுடன் அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முடியாது என அவர் அதை தட்டிக் கழித்தார். ஆனால், 2015 இல், 44 உறுப்பினர்களுடன் தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தோம். அந்த அரசாங்கத்தை ஒரு வருடம் கொண்டும் சென்றிருந்தோம்.

நாட்டில் எல்லாம் சரியான பின்னர், முழுமையான அரசாங்கமொன்றை தானா நீங்கள் பொறுப்பேற்பீர்கள் என்று வினவியிருந்தேன். ஏனெனில், எதிர்க்கட்சி என்றால் வீழ்ந்துக் கிடக்கும் நாட்டை தான் பொறுப்பேற்க வேண்டும். எனினும், இந்த சவாலை அவர் அன்று ஏற்கவில்லை.

பின்னர், நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடந்தபோது, அநுரகுமார திஸாநாயக்க 3 உறுப்பினர்களுடன் போட்டியிட்டிருந்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரோ அந்தப் போட்டியிலிருந்தும் விலகினார்.

இறுதிவரை இதில் போட்டியிடுவேன் என்று அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வாக்கெடுப்பு தினத்தன்று காலையில் தனது முடிவை மாற்றி டளஸ் அழகப்பெருமவை வேட்பாளராக நிறுத்தினார். அப்போதே நான், சவாலை ஏற்றுக் கொள்ளாத இப்படியான தலைவர்களால் பயனில்லை என்று நினைத்தேன்.

இப்படியான தலைவர்தான் இன்று பாடசாலைகளுக்கு சென்று பேருந்துகளையும் உபகரணங்களையும் வழங்கி வருகிறார். இதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கிறது? பொதுஜன பெரமுனவுக்கு நிதி வழங்கிய கொழும்பின் கெஷினோ வியாபாரிகள்தான் இவருக்கும் நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால்தான் மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேறும் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தொடர்பாக மக்களும் சிந்திக்க வேண்டும்.
எல்.டி.டி.ஈ. அமைப்பை முற்றாக அழிப்பேன் என கூறியபோது, யாரும் நம்பவில்லை. இறுதியில் செய்துக் காண்பித்தேன்.

அதேபோல, நாட்டின் ஊழல் மோசடிகளையும் நான் ஆட்சிக்கு வந்தவுடன் இல்லாதொழிப்பேன். ஒழுக்கமான ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஸ்தாபிப்பேன் என்றும் மக்களிடம் இவ்வேளையில் உறுதியளிக்கிறேன்” இவ்வாறு பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 

Related

Tags: பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் தொடர்பில் ரஞ்சித் மத்துமபண்டார கருத்து!

Next Post

இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவை!

Related Posts

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!
இலங்கை

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

2025-12-01
வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!
இலங்கை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!
இங்கிலாந்து

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
வெல்லாவெளி பகுதியில்  வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!
கிழக்கு மாகாணம்

வெல்லாவெளி பகுதியில் வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

2025-12-01
திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள்!
கிழக்கு மாகாணம்

திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள்!

2025-12-01
இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!
இங்கிலாந்து

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவுசெலவு திட்டம் பொய் என வெளியாகும் விமர்சனம்- விளக்கமளிக்கவுள்ள பிரதமர்!

2025-12-01
Next Post
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவை!

நாம் சரியான செயற்பாட்டை செய்துவிட்டுதான் வெளியேறுகிறோம்! -ஹரின்

நாம் சரியான செயற்பாட்டை செய்துவிட்டுதான் வெளியேறுகிறோம்! -ஹரின்

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! (update)

காலநிலையில் மாற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

0
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

0
வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

0
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

0
வெல்லாவெளி பகுதியில்  வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

வெல்லாவெளி பகுதியில் வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

0
பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

2025-12-01
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2025-12-01
வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
வெல்லாவெளி பகுதியில்  வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

வெல்லாவெளி பகுதியில் வயல்நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளன-விவசாயிகள் கவலை!

2025-12-01

Recent News

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

பேரிடர் நிலைமை; எதிர்க்கட்சிகளுக்கு ரணில் அழைப்பு!

2025-12-01
லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!

2025-12-01
வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கை!

2025-12-01
ஐந்து  ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மாற்றமடையவுள்ள பிரித்தானிய கடவுசீட்டு வடிவம்!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.