• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திட்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல தலைமை தூய்மையாக இருக்க வேண்டும்-பிரதமர்!

திட்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல தலைமை தூய்மையாக இருக்க வேண்டும்-பிரதமர்!

Rahul by Rahul
2025/04/22
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்க்கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு போராட்டம் மட்டுமே என்றபோதிலும், கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமானது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்

கொழும்பு மாவட்டத்தின் மத்திய கொழும்பு, மாளிகாவத்தை பிரிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

எமது அரசாங்கம் இப்போது பணிகளைத் தொடங்கியுள்ளது. நாங்கள் அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்தோம். அது அடுத்த எட்டு மாதங்களுக்கானது. பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில நன்மைகளை வழங்கும் அபிவிருத்தியை உருவாக்க, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்த நாங்கள் விரும்பினோம்..

நம் மீது குறை கூறும் யாரும் இந்த நாட்டின் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த பண விரயம் பற்றிப் பேசுவதில்லை.

நிதிகளை மிகவும் கவனமாக முகாமைத்துவம் செய்வதன் மூலம் நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோம். திட்டங்களை வகுக்கின்றோம். அந்தத் திட்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல, கீழ்மட்டத்தில் உள்ள தலைமையும் தூய்மையாக இருக்க வேண்டும்.

எனவே, இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இது ஒரு பிற்போடப்பட்டிருந்த தேர்தல். நாம் முதலில் செய்ய வேண்டியது, முன்னைய அரசாங்கங்களால் நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நிறைவுசெய்வதும், தவறுகளைச் சரிசெய்வதும்தான்.

அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு ரூபாயைப் பற்றியும் ஆயிரம் முறை சிந்திக்கிறது. அரசாங்கம் ஒதுக்கப்பட்ட பணத்தை கிராம மட்டத்திற்கு அனுப்பும்போது, அங்கு திருடர்கள் இருந்தால், நாம் எப்படி கிராமத்தை அபிவிருத்திசெய்ய முடியும்?. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான மக்களின் முடிவின் மூன்றாவது சவாலாகக் கருதி, மே 6 ஆம் திகதி நடைபெறும் தேர்தல்களில் முன்னைய தேர்தல்களைப் போன்ற ஒரு வெற்றியைப் பெறுவோம்.

ஆட்சியின் மேல் மட்டத்தில் ஒன்று, கீழ் மட்டத்தில் ஒன்று என இரண்டு அரசியல் கலாசாரங்கள் இருக்க முடியாது. மேல் மட்டங்கள் வீண்விரயம், ஊழல் மற்றும் மோசடி இல்லாமல் செயற்பட வேண்டுமென்றால், கிராம மட்டத்திலும் இதே போன்ற கட்டுப்பாடு இருக்க வேண்டும். அந்த நோக்கத்திற்காக தேசிய மக்கள் சக்தி மட்டுமே பொருத்தமான வேட்பாளர்களை முன்வைத்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் வருடாந்த வருமானம் 30 பில்லியன் ஆகும். அது மக்களுக்காக ஒதுக்கப்பட்டால், இன்று கொழும்பு இப்படி இருந்திருக்காது. கொழும்பில் ஆனந்தா, நாளந்தா, ரோயல் போன்று ஆசிரியர்கள் இல்லாத, தண்ணீர் இல்லாத, கழிப்பறை வசதிகள் இல்லாத பாடசாலைகள் உள்ளன. அது எப்படி நடந்தது?

பிரதேச மட்டத்திலான பிரச்சினைகளுக்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் அதிக பொறுப்பைக் கொண்டுள்ளன. அந்த நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாவிட்டால், நாம் எப்படி ஒரு புதிய நாட்டை உருவாக்க முடியும்?

இன்று, அரசின் திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். நாட்டின் அபிவிருத்தி இப்போதுதான் தொடங்குகிறது, ஆனால் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. தேசியளவில் செய்யப்படும் திட்டங்களை கீழ்மட்டங்களில் யதார்த்தமாக்க, நகர சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சரியான தலைமை அவசியம்.

நாட்டை ஊழல் அரசியலிலிருந்து விடுவிப்பதற்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மக்கள் தங்கள் வாக்குகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய் கெலீ பல்தசார், மா நகர சபை வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்

Related

Tags: cleanleadershiplkamustnewsPrime Ministerupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கார்டினல் மெல்கம் ரஞ்சித்!

Next Post

சமூக ஊடகங்களில் போலி கடிதம்: பொலிஸார் எச்சரிக்கை!

Related Posts

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!
இலங்கை

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி
இலங்கை

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!
இலங்கை

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்
இலங்கை

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30
அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கம்! 
இலங்கை

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு  விசேட உரை!

2025-11-30
Next Post
சமூக ஊடகங்களில் போலி கடிதம்: பொலிஸார் எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் போலி கடிதம்: பொலிஸார் எச்சரிக்கை!

அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப்  பரிசளித்த பிரதமர் மோடி!

அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி!

புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்!

புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

0
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

0
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

0
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

0
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

0
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
குறைந்த காற்றழுத்தம் ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்; மக்கள் அவதானம்

25 மாவட்டங்களை பாதித்த அனர்த்த நிலை-உயிரிழப்புகள் அதிகரிப்பு!

2025-11-30

Recent News

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்தி சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்!ஜனாதிபதி

2025-11-30
மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

மாவிலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 211 பேர் மீட்பு!

2025-11-30
அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2025-11-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.