தமிழகத்தைச் சேர்ந்த குறைந்தது 14 இந்திய மீனவர்கள் இன்று (06) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மீனவர்கள் இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஒன்றில் 10 பேரும், மற்றொன்றில் நான்கு பேரும் இருந்தனர்.
இதன்போது, சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கற்பிட்டி கடல் பகுதியில் மீனவர்கள் கடல் எல்லைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதுடன், அவர்களது படகும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட பின்னர், மீனவர்கள் புத்தளத்தில் உள்ள இலங்கை கடற்படை முகாமுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் தங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தொடர் சம்பவங்களில் இது அண்மைய சம்பவம் ஆகும்.














