பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கில் இணைந்துள்ளார்.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகள் ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பு கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.














