மோசமான வானிலையால் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (29) அதிகாலை 02.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பதுளை, கொழும்பு, காலி, கேகாலை, குருநாகல், மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














