பிரதான ரயில் சேவைகள் இன்று (02) அம்பேபுஸ்ஸ வரை மட்டுமே இயங்கும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தளம் பாதையில் ரயில் சேவைகள் கொச்சிக்கடை வரை மட்டுமே இருக்கும் என்றும், களனிவெளி மற்றும் கரையோரப் பாதைகளில் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய பாதகமான வானிலை காரணமாக பொல்கஹவெல, ரம்புக்கன, குருநாகல், கனேவத்த, சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்குச் செல்ல முடியாததால், பிரதான ரயில் பாதையிலும் புத்தளம் பாதையிலும் 18 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அனர்த்த நிலைமை காரணமாக அடைய முடியாத பகுதிகளுக்கு பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.













