களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் விளைவாக, களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளைப் பாதித்த வெள்ளப்பெருக்கு நிலைமையும் குறைந்து வருகிறது.
களு கங்கை மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
திணைக்களத்தின் கூற்றுப்படி, இன்று (02) அதிகாலை 2:00 மணிக்கு 8.00 அடியாக இருந்த களனி ஆற்றின் நாகலகம் வீதி அளவீட்டில் நீர்மட்டம் அதிகாலை 3:00 மணிக்கு 7.90 அடியாகக் குறைந்துள்ளது.
எனினும், ஒரு பெரிய வெள்ள நிலைமை இன்னும் தொடர்கிறது.
இதேபோல், ஹன்வெல்ல அளவீட்டில் அதிகாலை 2:00 மணிக்கு நீர்மட்டம் 8.00 அடியாக பதிவாகியுள்ளது.
இது அதிகாலை 3:00 மணிக்கு 7.93 அடியாகக் குறைந்தது.
ஆனால் வெள்ளப்பெருக்கு நிலையில் உள்ளது.
இதற்கிடையில், களு கங்கையில் உள்ள எல்கம அளவீட்டில் அதிகாலை 2:00 மணிக்கு 10.40 அடியாக நீர்மட்டம் பதிவாகியுள்ளது.
அதிகாலை 3:00 மணிக்கு 10.30 அடியாகக் குறைந்துள்ளது.
எனினும், இன்னும் ஆபத்து மண்டலத்திற்குள் உள்ளது.
மேலும், மல்வத்து ஓயாவில் உள்ள தந்திரிமலை அளவீட்டில் அதிகாலை 2:00 மணிக்கு 8.98 அடியாக இருந்தது.
அதிகாலை 3:00 மணிக்கு 8.95 அடியாக சற்று குறைந்தது, ஆனால் பெரிய வெள்ள நிலைமை இன்னும் தொடர்கிறது.












