ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அழித்துள்ளனர்.
ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி தாலுகாவுக்குட்பட்ட கல்லார் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 4 கிலோ வெடிமருந்துகள் நிரப்பிய சக்திவாய்ந்த வெடிபொருளை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் வெடிபொருளை பத்திரமாக செயலிழக்கம் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது.
இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இதேவேளை ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அழித்தனர்.என்றும், வெற்றிகரமாக சதிச் செயல் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் இந்திய இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















