போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (28) நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 800 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட 805 சோதனைகளில் மொத்தம் 799 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் இரண்டு நபர்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலும் எட்டு பேருக்கு எதிராக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக நடவடிக்கையின் போது அடையாளம் காணப்பட்ட ஒன்பது போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய சோதனைகளின் போது, அதிகாரிகள் 383 கிராம் ஐஸ், 287 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.













