உடவளவ – தனமல்வில வீதியில் மலபொதுஆர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பெரியல் சந்தியில் இருந்து தனமல்வில நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியோரத்தில் நடந்து சென்ற ஒரு சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த சிறுவன், உடவளவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடவளவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













