ஐரோப்பா மீதான அமெரிக்காவின் ’வர்த்தக மிரட்டல்கள்’ இன்னும் முடிவடையவில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரித்தார்.
”கிரீன்லாந்து’ விடயத்தில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். ஐரோப்பிய நட்பு நாடுகளுடனான வர்த்த அச்சுறுத்தல்கள் நீக்கப்படுவதாக வாஷிங்டன் அறிவித்துள்ள போதும், அதனை நீண்டகால தீர்வாக கருதக்கூடாது எனவும் கூறினார்.
ட்ரம்பின் நிர்வாகம் “வெளிப்படையான ஐரோப்பிய எதிர்ப்பு” மற்றும் “ஐரோப்பிய ஒற்றுமையை சிதக்கக்கூடியது!” என மிக அழுத்தமாக பதிவு செய்தார்.
இறுதியாக, “நாம் இப்போது கிரீன்லாந்து தருணம் என்று அழைக்கக்கூடிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம்! இது அப்பட்டமான ஆக்கிரமிப்பு… நாம் தலைவணங்கவோ அல்லது ஒரு தீர்வை எட்ட முயற்சிக்கவோ கூடாது”. ” எனவும் தெரிவித்தார்.

















