பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட முதல் விஜயம் மற்றும் 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர் மேற்கொண்ட முதல் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மை வலுவடையும் நேரத்தில் வருகிறது.
விஜயம் தொடர்பான புது டெல்லியின் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் நிலுவையில் உள்ளது.
ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பைத் தொடர்ந்து பெப்ரவரி 24-25 திகதிகளில் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றன.














