2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணத் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வார இறுதியில் சூப்பர் 8 சுற்று போட்டிகளானது ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வரும் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் போட்டியிடும் 20 அணிகளில், நான்கு குழுக்களிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் எட்டு நாடுகள் சூப்பர் 8 நிலைக்குச் செல்லும்.
இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள், நேபாளத்திற்கு எதிரான போட்டியில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, குழு C-யில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்ததன் மூலம் 2026 டி20 உலகக் கிண்ண சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக மாறியது.
குழு A-யில் பரம எதிரியான பாகிஸ்தானை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நடப்பு சாம்பியனான இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு அடுத்ததாக தகுதி பெற்றது.
கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்துடன் சேர்ந்து குரூப் D-பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இரண்டு முறை வெற்றியாளர்களான இங்கிலாந்து அணி, தங்கள் இறுதி குழு நிலைப் போட்டியில் இத்தாலியை 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்த இரண்டாவது குழு C அணியானது.
முன்னாள் சாம்பியனான அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பின்னர் குழு B – இலிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக இலங்கை முன்னேறியது.
மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்ட அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு புள்ளியைப் பெற்றதன் மூலமாக குழு B – இல் மேலும் ஒரு புள்ளியைப் பெற்ற சிம்பாப்வே சுப்பர் 8 சுற்றுக்கு இரண்டாவது அணியாக நுழைந்தது.
இந்த போட்டி 2026 டி:20 உலகக் கிண்ணப் பயணத்திலிருந்து அவுதிரேலியாவை வெளியேற்றியது.
ஒட்டு மொத்தமாக சுப்பர் 8 சுற்றுக்கு ஏழு அணிகள் இதுவரை முன்னேறியுள்ளன.
இன்னும் ஒரு இடம் மீதமுள்ள நிலையில் அதற்காக முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிடம் பலத்த போட்டி எழுந்துள்ளது.















