2003 ஆம் ஆண்டு ஈராக் மீது படையெடுத்ததிலிருந்து, அமெரிக்கா தனது மிகப்பெரிய விமானப்படையை மத்திய கிழக்கில் நிலைநிறுத்தி வருவதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து தனது இராணுவ இருப்பை இந்தப் பகுதியில் அதிகரித்து வருவதாகவும், F-22 மற்றும் F-35 போர் விமானங்களை அனுப்பி வருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.
மேலதிகமாக இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் கட்டளை இடுகை விமானம் ஆகியவையும் இந்தப் பயணத்தில் உள்ளன.
இந்தக் கட்டமைப்பு, ஈரானுக்கு எதிராக பல வாரங்களுக்கு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வொஷிங்டனை அனுமதிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமிய குடியரசைத் தாக்குவதா இல்லையா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் The Wall Street Journal செய்திச் சேவை குறிப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வருவதாலும், உடனடி அமெரிக்க தாக்குதல்கள் குறித்த தகவல்களுக்கு மத்தியிலும் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இந்த வாரம் ஜெனீவாவில் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளின் போது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், ஆனால் சில விடயங்களில் இடைவெளி நீடித்ததாகவும் வெள்ளை மாளிகை கூறியது.
சில வாரங்களில் மேலதிக விவரங்களுடன் தெஹ்ரான் பேச்சுவார்த்தகை்கு திரும்பி வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.














