ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும், நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், 504 இடங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதுடன், மொத்த தாக்குதல்கள் 1, 039 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் அவசர மருத்துவ சேவைகளை வழங்குதல் போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது

















