இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தை 5% அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலைகள் அண்மையில் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ,
முன்னர் பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டிருந்தாலும், நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போக்குவரத்து கட்டணங்கள் மாற்றமின்றி பராமரிக்கப்பட்டது.
எனினும், ஒடடோ டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாவினால் நேற்றிரவு நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
திருத்தப்பட்ட போக்குவரத்து கட்டணங்கள் இன்று (10) முதல் அமுலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.















