முல்லைத்தீவு மாவட்டசெயலாளருக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையில் 16 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, கொக்குத்தொடுவாயில் தமிழ்மக்களின் வயல்காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் உப்பள விவகாரம் உள்ளிட்ட பல்வேறுவிடயங்கள் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












