“இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் விழிப்புணர்வு” என்ற தலைப்பின் கீழ் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிப் பதிவுகள் குறித்து இலங்கை பொலிஸ் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் ஒரு அறிக்கையை வெளியிட்ட பொலிஸார்,
அனைத்து அதிகாரப்பூர்வ விழிப்புணர்வுச் செய்திகளும், பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ ஊடக வெளியீடுகளாக உரிய கடிதத் தலைப்பின் கீழ் பொலிஸ் ஊடகப் பிரிவு மூலமாக மட்டுமே வெளியிடப்படுகின்றன என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பொலிஸாரால் வெளியிடப்பட்டதாகத் தவறாகக் கூறி, தனிநபர்களோ அல்லது குழுக்களோ பதிவுகளைப் பரப்பினால், அது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையின் பகுதியா என்பதை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
அத்தகைய பதிவுகளின் உள்ளடக்கம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான வழிகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.













