ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று (27) மதியம் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, ஏதேனும் ஒரு குழுவினர் தொடர்ந்து காடுகளுக்கு தீ வைத்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் வன அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் .
தொடர்ந்து காடுகளுக்கு தீ வைப்பது குற்றச்செயலாகும், எனவே தீவைப்போர் இனங்காணப்படும் பட்சத்தில், அவர்களுக்கெதிராக தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது













