நுவரெலியா பிரதேசபையின் கீழ் இயங்கும் நானுஓயா கெல்சி , மஹாஎலியவிற்கு செல்லும் பிரதான வீதியினை புனரமைப்பு செய்து இன்று (01) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தலையீட்டின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்து பிரதேச சபை உறுப்பினர் ராமையா திருச்செல்வம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் , துரித கதியில் 35 இலட்சம் ரூபாய் செலவுவிடப்பட்டு வீதியினையும், வீதியோர வடிகான்களையும் புனரமைத்து மக்களின் பாவனைக்கு கையளிப்பு செய்துள்ளனர்.
பல வருட காலமாக இவ் வீதி புணரமைக்கப்படாது குன்றும் குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பாடசாலை மாணவர்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் விவசாயிகள் என இவ்வீதி ஊடாக பயணிப்பதில் பல வருட காலமாக பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் தற்போது வீதி புனரமைப்பு செய்துள்ளமை இட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்












