புதன்கிழமை (02) அன்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடக்க ஆட்டத்தில் முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் சரிவையும் மீறி டெல்லி கேப்பிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய முக்கிய வீரரான சமீர் ரிஸ்வி அரைசதம் அடித்தார்.
நான்காவது ஓவரில் தங்கராசு நடராஜனுக்குப் பதிலாகக் களமிறங்கிய ரிஸ்வி, 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை எடுத்து, 17.1 ஓவர்களில் டெல்லி அணியை 4 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் என்ற இலக்கினை எட்ட வழிநடத்தினார்.
லக்னோ, பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமன இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அக்சர் படேல் பந்து வீசினைத் தேர்வு செய்தார்.
அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களுக்கு சுருண்டது.
லக்னோ அணி சார்பில் அதிகபடியாக மிட்செல் மார்ஷ் 35 (28) ஓட்டங்களையும், அப்துல் சமத் 36 (25) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் லுங்கி ங்கிடி மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் மற்றும் அக்ஸர் படேல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.
பின்னர், சேஸிங்கில் டெல்லி அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது; ஐந்தாவது ஓவரில் 26 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், தென்னாப்பிரிக்காவின் சமீர் ரிஸ்வியும் (70 ஓட்டங்கள்( டிரிஸ்டன் ஸ்டப்ஸும் (39 ஓட்டங்கள்) இணைந்து ஆட்டத்தை வெல்லும் விதமாக 119 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை அமைத்தனர்.
இந்த இணைப்பாட்டம் 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணிக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக சமீர் ரிஸ்வி தெரிவானார்.















