2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (28) நடைபெற்ற 40 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த தோல்வியானது நடப்பு ஐபிஎல் சீசனில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்றுக் கொண்ட முதல் தோல்வியாகும்.
நேற்றிரவு 07.30 மணிக்கு நியூ சண்டரிகாரில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுசெய்ய அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்களை எடுத்தது.
பிரப்சிம்ரன் சிங் 44 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 59 ஓட்டங்களை பதிவு செய்தார்.
அதேநேரத்தில், மார்கஸ் ஸ்டோனிஸ் 22 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை எடுத்து அணியின் கடைசி நேர எழுச்சிக்கு வழிவகுத்தார்.
ராஜஸ்தான் அணிக்காக, யஷ் ராஜ் புஞ்சா இரண்டு விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நாந்த்ரே பர்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர், 223 ஓட்டங்களை துரத்திய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டோனோவன் ஃபெரேரா ஆகியோர் தங்களது சிறப்பான அரைசதங்களால் அணியை முன்னின்று வழிநடத்த, சுபம் துபே 12 பந்துகளில் அதிரடியாக 31 ஓட்டங்களை குவித்து அணிக்கு ஒரு எளிதான வெற்றியை உறுதி செய்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக டோனோவன் ஃபெரைரா தெரிவானார்.















