பன்னிரண்டுக்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளுக்காக தேசிய சுகாதார சேவையால் அறிமுகப்படுத்தப்படும் ஒரு நிமிடத் தடுப்பூசியால் இங்கிலாந்தில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பயனடையவுள்ளனர்.
இந்த நோயெதிர்ப்பு சிகிச்சை ஊசியானது, புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்குமாறு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்குத் தெரிவிப்பதன் மூலம் செயல்படுகிறது.
மேலும், இது நுரையீரல், மார்பகம், தலை மற்றும் கழுத்து, மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட பல வகையான நோய்களுக்கு எதிராக சக்தி வாய்ந்ததாக உள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுவரை, புற்றுநோய் சிகிச்சைக்காக பெம்ப்ரோலிசுமாப் (pembrolizumab) என்ற மருந்தை நோயாளிகளின் உடலுக்குள் செலுத்த, அவர்கள் நீண்ட நேரத்துக்கு சொட்டு மருந்து செலுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
எனினும், புதிய ஊசி வடிவம் மூலம், சிகிச்சைக்குத் தேவைப்படும் நேரத்தை நோயாளிகள் 90% வரை குறைக்க முடியும்.
நோயாளிகளுக்கு எந்த வகை புற்றுநோய் உள்ளது என்பதைப் பொறுத்து, இந்த சிகிச்சையானது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை ஒரு நிமிட ஊசியாகவோ அல்லது ஆறு வாரங்களுக்கு ஒருமுறை இரண்டு நிமிட ஊசியாகவோ அளிக்கப்படுகிறது.
தேசிய சுகாதார சேவையில் (NHS) இந்தப் புதிய ஊசியைப் பெற்ற முதல் நோயாளிகளில் ஒருவர், ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் (Hertfordshire) உள்ள செயின்ட் ஆல்பன்ஸைச் சேர்ந்த, குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 89 வயதான ஷெர்லி செர்க்சஸ் ஆவார்.













