இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதேநேரம், சாதாரண தேநீரின் விலையை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரிப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சிற்றுண்டிகளின் விலையும் 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்தார்.
எனினும், முட்டை ரொட்டி, பரோட்டா மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலையில் எந்த உயர்வும் மேற்கொள்ளப்படவில்லை.
உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் அதிகரித்ததை தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
















