நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான மொபைல்கள் மற்றும் மின்கலன்களை வைத்திருந்ததை அடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
34 வயதான சீனப் பெண் ஒருவரும், 35 வயதுடைய இரண்டு ஆண் பயணிகளுமே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
சந்தேக நபர்கள் நேற்று மாலை (19) விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது இடைமறிக்கப்பட்டனர்.
அந்தக் குழுவினர், சீனாவின் ஷாங்காயிலிருந்து சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் MU-6017 மூலம் நேற்று மாலை 6.43 மணிக்கு இலங்கை வந்தடைந்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் ரூ. 5.14 மில்லியன் பெறுமதியான 87 மொபைல்கள் மற்றும் 140 மின்கலங்கள் மீட்கப்பட்டன.
இந்தப் பொருட்கள் இணையவழி குற்றச் செயல்களில் பயன்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













