ஜெய்ப்பூரில் நேற்றிரவு (19) நடந்த 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் நடப்பு ஐ.பி.எல்.சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கான தனது இடத்தை ராஜஸ்தான் வலுவாகத் தக்கவைத்துக் கொண்டது.
220 ஓட்டங்களை லக்னோ அணிக்கு விட்டுக்கொடுத்த பின்னர், ராஜஸ்தான் அணி இந்த சீசனின் தங்களின் மிகச்சிறந்த துடுப்பாட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தி பதிலடி கொடுத்தது.
இளம் வயது நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி பிரமிக்க வைக்கும் வகையில் 93 ஓட்டங்களை எடுத்து சேஸிங்கிற்கு தலைமை தாங்கினார்,
அதே நேரத்தில் துருவ் ஜூரல் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை எடுத்து நிதானமாக ஆட்டத்தை முடித்து வைத்தார்.
தற்போது 14 புள்ளிகளைப் பெற்றுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, தங்களது கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸைத் தோற்கடித்தால் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
மேலும், கடந்த சில நட்களாக போட்டிகளில் உத்வேகமின்றித் தவித்த ராஜஸ்தான் அணிக்கு இந்த வெற்றி மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது.
அதையடுத்து வலுவான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் சூர்யவன்ஷியின் 38 பந்துகளில் 93 ஓட்டங்கள் என்ற அதிரடியான ஆரம்பத்துடன் 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 225 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக வைபவ் சூர்யவன்ஷி தெரிவானர்.














