சவூதி புரோ லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் டமாக் அணியுடனான போட்டியில் 4-1 என்ற ரீதியில் வெற்றிப்பெற்று அல்நசார் அணி 11வது முறையாக கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது.
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரோனால்டோ தலைமையில் வென்ற முதல் சவூதி புரோ லீக் தொடராக இது மாற்றம்பெற்றது.
சவூதி அரேபியாவின் 18 முன்னனி கழகங்களுக்கிடையில் நடைபெற்றுவருகின்ற சவூதி புரோ லீக் போட்டிகளின் முக்கியமான போட்டியில் அல்நசார் அணி டமாக் அணியுடன் பலப்பரீட்சை நடாத்தியிருந்தது.
புள்ளிகள் அடிப்படையில் அல்நசார், அல்ஹிலால், அல் ஹக்லி ஆகிய அணிகள் சிறு புள்ளி வித்தியாசத்தில் அடுத்தடுத்த இடங்களில் காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் வெற்றிப்பெற்றால் கிண்ணம் என்ற நிலையில் அல்நசார் அணி களமிறங்கியிருந்தது.
கிறிஸ்டியானோ ரோனால்டோ தலைமையில் முதல் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கிய அல்நசார் அணி 33வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் சாடியோ மானேவின் கோலின் உதவியுடன் 1-0 என முன்னிலைப்பெற்றது. போட்டியை சமப்படுத்த டமாக் அணி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது அல்நசார் அணி.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் போட்டியின் 51வது நிமிடத்தில் கிஸ்லி கோமன் சிறப்பான கோல் ஒன்றினை பதிவு செய்து அசத்தினார். இதனால் 2-0 என அல்நசார் அணி முன்னிலைப்பெற்றது.
இந்நிலையில் போட்டியின் 57வது நிமிடத்தில் டமாக் அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிட்டியது அதனை மோர்லயே சி;ல்லா கோலாக மாற்றினார். 2-1 என்ற ரீதியில் போட்டி களத்திற்குள் நுழைந்தது டமாக் அணி.
இருந்தும் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வண்ணம் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரோனால்டோ 62வது நிமிடத்தில் அல்நசார் அணியின் கோல் எண்ணிக்கையை 3க உயர்த்தினார்.
மைதானத்தில் ரசிகர்கள் ஆர்பரிக்க வெற்றிக்கொண்டாடத்தை ஆரம்பித்தது அல் நசார் அணி, பின்னர் போட்டியின் 80வது நிமிடத்தில் மீண்டும் ரோனால்டோ தனது இரண்டாவது கோலிகை பதிவு செய்ய 4-1 என போட்டி மாறியது.
அரங்கம் முழுவதும் ரசிகர்களின் ஆர்பரிப்புடன் கிறிஸ்டியானோ ரோனால்டோ தலைமையிலான அல்நசார் அணி தனது 11வது சவூதி புரோ லீக் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

















