இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதுடன்
அமெரிக்கக் குழு டில்லிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடில்லியின் ஹைதராபாத் இல்லத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதன்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து முன்கூட்டியே புரிந்துணர்வு ஏற்படுவதன் முக்கியத்துவத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
அத்துடன் அமெரிக்கக் குழு டில்லிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















