பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் டிரினிட்டி கல்லூரி (Trinity College), கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாமல் போயுள்ள தங்களது மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க சிலைகளைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
இந்த 9 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான பெண் சிலைகள் யாரேனும் ஒருவரின் வீட்டுத் தோட்டம், பழைய கட்டிடங்கள் அல்லது ஏதேனும் ஒரு பொது இடத்தில் இருக்கலாம் என டிரினிட்டி கல்லூரி நிர்வாகம் நம்புகிறது.
இதேவேளை, டிரினிட்டி கல்லூரியின் தேவாலயக் கோபுரத்தின் (Chapel tower) உச்சியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நான்கு சிலைகள் கம்பீரமாக நின்று வந்தன.
இவை வானியல் (Astronomy), வடிவியல் (Geometry), மருத்துவம் (Medicine) மற்றும் இறையியல் (Theology) ஆகிய நான்கு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில், கடுமையான வானிலையால் சேதமடைந்த இந்த சிலைகளை மாற்றுவதற்கான திட்டத்தில் கல்லூரியின் நிர்வாகம் ஈடுபட்டது.
இதன்போது, தற்போது கோபுரத்தின் மேல் நிற்கும் சிலைகள் அசல் (Original) சிலைகள் அல்ல என்ற தகவல் தெரியவந்துள்ளது.
இந்த பின்னணியிலேயே தற்போது இந்த சிலைகளை கண்டுபிடிப்பதற்கு கல்லூரி நிர்வாகம் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.














