• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

வெளிநாட்டிலிருந்து மேலும் 8 பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர் – பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/28
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டு, சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிக்கப்பட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மேலும் 89 குற்றவாளிகளை நாட்டுக்குக் கொண்டு வருவதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தலைமறைவாக இருந்த மேலும் 8 முக்கிய குற்றவாளிகள் நேற்று முன்தினம் (27) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அழைத்து வரப்பட்ட 8 சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மற்றும் ஷார்ஜா பகுதிகளில் பல்வேறு குற்றங்களுக்காக அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களாவர். இலங்கை புலனாய்வுப் பிரிவினரின் இரகசிய மற்றும் சாதுரியமான நடவடிக்கையின் மூலமாகவே இவர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர், இலங்கையின் முன்னணி திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் (Underworld Gangs) நெருங்கிய தொடர்புகளைப் பேணி, டுபாயில் இருந்தவாறே இலங்கைக்குள் கொலை மற்றும் கப்பம் கோரல் போன்ற குற்றச் செயல்களை இயக்கியவர்களாவர்.

இவர்களில் இருவர் சர்வதேச மட்டத்திலான மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களில் (Drug Trafficking) ஈடுபட்ட முக்கிய புள்ளிகளாவர்.

எஞ்சிய மூவரும் இலங்கையில் நிதி மோசடி மற்றும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த மே 22ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 19 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 21 பேர் இலங்கை அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் தற்போது பொலிஸ் விசேட பிரிவுகளின் கீழ் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நாட்டில் குற்றங்களைச் செய்துவிட்டு, பல்வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்று, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து கொண்டு, வெளிநாடுகளில் இருந்தபடி இலங்கையில் குற்றச் செயல்களை இயக்கும் எவருக்கும் நாங்கள் இடமளிக்கப் போவதில்லை என்பதை மீண்டும் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறோம்.

கடந்த 2024, 2025 மற்றும் நடப்பு 2026 ஆகிய மூன்று வருட காலப்பகுதிக்குள் மட்டும் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் 32 சந்தேகநபர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி, பல்வேறு நாடுகளுடன் இராஜதந்திர ரீதியாகத் தொடர்புகொண்டு, குற்றங்களுடன் தொடர்புடைய மேலும் 70 சந்தேகநபர்கள் என இதுவரையில் 102 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எஞ்சியுள்ள, சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள 89 சந்தேகநபர்களையும் சர்வதேச பொலிஸ் மற்றும் அண்டை நாடுகளின் உதவியுடன் மிக விரைவில் இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் மேலும் தெரிவித்தார்.

 

Related

Tags: f u vudlerinterbpolred noticesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

Next Post

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

Related Posts

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!
இலங்கை

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!
இலங்கை

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

2026-08-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
இலங்கை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”
இலங்கை

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!
இலங்கை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

2026-08-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

2026-08-28
Next Post
மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து நகைகள், பணம் கொள்ளை!

நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் !

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகுவதாக அறிவிப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகுவதாக அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

0
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

0
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

0
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

0
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

0

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பு!

2026-08-28
நீர்கொழும்பு சிறை மோதல் –  தலைமை சிறை அதிகாரி  உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

2026-08-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.