மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாராஹேன்பிட்டி பிரதான அலுவலகத்தின் கணினி கட்டமைப்பு இன்று (01) சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முடங்கியிருந்ததன் காரணமாக அதன் சேவை நடவடிக்கைகள் பாதிக்கப்படைந்திருந்தன.
இந்த நிலைமை காரணமாக சாரதி அனுமதிப் பத்திரம், வாகனப் பதிவு மற்றும் இதர சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டதைத் தொடர்ந்து கணினி கட்டமைப்பு வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், தற்போது வழமையான முறையில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிகப்பட்டுள்ளது.














