பொலிசாருக்குத் தகவல் வழங்கியதாக சந்தேகித்து, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தின் திட்டமிடலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கடந்த 28 ஆம் திகதி களுத்துறை, வெட்டுமகட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றிருந்தார்.















