வெசாக் தினத்தை முன்னிட்டு கந்தளாய் நகரில் சுமார் 10, 000 பேருக்கு பகல் உணவு (தான்சல்) வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் கந்தளாய் நகரின் கடை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து இந்த மகத்தான தான்சல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
கந்தளாய் பிரதான வீதியூடாக பயணித்த வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் இதில் கலந்துகொண்டு தான்சலைப் பெற்றுக்கொண்டனர்.
உணவைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததுடன், நிகழ்வில் சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன, மத பேதமின்றி சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் தான்சலைப் பெற்றுக்கொண்டதுடன், இந்த நிகழ்வு மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.















