உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சட்டமா அதிபர் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டைச் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.














