இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் ஃபூ சியாவோ (Senior Colonel Fu Xiao), பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (15) கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் சுமூகமாகக் கலந்துரையாடினர்.
இலங்கை ஆயுதப்படைகளின் இராணுவப் பயிற்சிகள் மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் பங்களிப்புகளையும், தொடர்ச்சியான ஆதரவையும் பாதுகாப்பு பிரதியமைச்சர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.
மேலும், இலங்கை தற்போது மேற்கொண்டு வரும் முக்கிய இராணுவக் கொள்கை மாற்றம் குறித்து சீனப் பிரதிநிதிகளுக்கு அவர் விளக்கமளித்தார்.
பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், எதிர்காலத்தில் இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டிய அதிமுக்கிய துறைகளாக சர்வதேச கடல் பிராந்தியத்தில் சவாலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதக் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தல்களைக் கூட்டுறவோடு எதிர்கொள்ளல்., இரு நாட்டுப் படைகளுக்கும் இடையிலான நவீன தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்தல், முப்படைகளின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுப் பயிற்சிகள் மற்றும் நவீன ஒப்புருவாக்க (Simulation) நிகழ்ச்சிகளை நடத்துதல், இயற்கை பேரிடர்களின் போது அவசர மீட்புப் பணிகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைத்தல், இராணுவ ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பில், கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படை ஆலோசகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது என்பன அடையாளம் காணப்பட்டன.















