முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரி யோஷித ராஜபக்ஷவின் கைதுக்கான காரணங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) விவரித்துள்ளது.
இந்த வழக்கு அவரது ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிச் செயல்முறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பானது என்று தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு, ஜூன் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு எண் 2026/067 இல், கடற்படை மாணவராக இருந்த யோஷித ராஜபக்ஷ, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் 2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிர்வாகப் பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி நடைமுறைகளுக்குப் புறம்பாக, அரசாங்க நிதியைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் ரோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அவருக்குப் பின்னர் வழங்கப்பட்டது.
இந்த ஊழல் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக, தங்களது புலனாய்வு அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.














