தங்களது ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்த பின்னர் , தாங்கள் அரசியலுக்கு வர வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து மக்களிடமே நேரடியாகக் கருத்து கேட்போம் என அந்த இயக்கத்தின் நிறுவனரான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வ யூடியூப் (YouTube) பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில், இயக்கத்தின் எதிர்கால இலக்குகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
நாம் அனைவரும் ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் மூலம் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்துள்ளோம். சமூகத்தில் ஒரு பெரும் மாற்றத்தை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த மாற்றத்திற்கான அடித்தளத்தை நாம் மிக அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறோம்.
அதுவரை நாம் நிர்ணயித்த இலக்கை நோக்கித் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவோம்.
பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்துப் பாரம்பரிய அரசியல் கட்சிகள் பேசுவதில்லை என்று அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.
“மக்களின் அன்றாட வாழ்க்கை, விவசாயம், நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் மற்றும் நாம் சுவாசிக்கும் சுகாதாரமற்ற காற்று போன்ற மிக முக்கியமான அன்றாடப் பிரச்சினைகள் குறித்து நாம் வீரியமாகப் பேச வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய அரசியல் கட்சிகள் எதுவும் இது போன்ற மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்துப் பேசுவது கிடையாது” என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
‘வீ தி லீடர்ஸ்’ இணையப்பக்கம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் என்று உறுதியளித்துள்ள அண்ணாமலையின் இந்த புதிய அறிவிப்பு, தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தள வட்டாரங்களில் தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது.













