கேம்பிரிட்ஜ்ஷையரில் (Cambridgeshire) அமைந்துள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் முதலைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் 3 வயது சிறுவன் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவன் ஒருவன் முதலைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சென்றது தொடர்பான சம்பவம் குறித்து, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மதியம் 1.24 மணிக்குக் தமக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்ததாக கேம்பிரிட்ஜ்ஷயர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தச் சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் சிகிச்சையின் பின்னர் சீராக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் அச்சிறுவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் ஆதரவளித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நார்போக்கைச் (Norfolk) சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபருக்கும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் இடையே முன்பின் அறிமுகம் ஏதுமில்லை என்று தெரிவித்த பொலிஸார் குறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளாகவும் குறிப்பிட்டனர்.














