வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டாவுக்கு ( Ceuta ) சட்டவிரோதமாக 60 ஆயிரம் குடியேற்றவாசிகள் பிரவேசித்ததை தொடர்ந்து அவர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது .
பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கன்சர்வேடிவ் மற்றும் ரிஃபார்ம் யுகே கட்சிகள் அமைச்சர்களை வலியுறுத்தியுள்ளன .
குடியேற்றவாசிகளில் சிலர் ‘தவிர்க்க முடியாமல் இங்கிலாந்துக்குள் நுழைய முயற்சிப்பார்கள்’ என நிழல் வெளியுறவுச் செயலாளர் பிரிதி படேல் (Priti Patel ) தெரிவித்துள்ளார் .
இதேநேரம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கலேஸ் மற்றும் பிரித்தானியாவை நோக்கி வருவார்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது எனவும் இது தமது நாகரீகத்துக்கான போர் எனவும் சீர்திருத்தத் தலைவர் நைகல் ஃபாரேஜ் (Nigel Farage) எச்சரித்துள்ளார்.















