மத்திய லண்டனில் சீனாவின் மிகப் பெரிய தூதரகத்தை அமைக்க அனுமதி அளித்த அரசாங்கத்தின் முடிவு சட்டப்பூர்வமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் தூதரக கட்டுமானத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ரோயல் மிண்ட் கோர்ட்’ (Royal Mint Court ) குடியிருப்பு பகுதியில் அமையவுள்ள இந்த தூதரகம் தொடர்பில் , அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த தூதரகம் அமைந்தால் சீன எதிர்ப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் மனித உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், உளவு பார்க்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாடியிருந்தனர்.
எனினும், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வீடமைப்பு அமைச்சுமும் உள்ளூர் நிர்வாகமும் அனைத்து விடயங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்னரே சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறி குடியிருப்புவாசிகளின் மனுவை நிராகரித்தது.
சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகம், பிரித்தானியாவிலேயே மிகப்பரிய தூதரக வளாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக குடியிருப்புவாசிகள் அமைப்பின் தலைவர் லூக் பொல்லார்ட் ( Luke Pollard ) தெரிவித்துள்ளார்.















