• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/22
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின் கடந்தகால வன்முறை மற்றும் காணாமற்போனோர் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகளை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

பல தசாப்தங்களாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து பதில் தேடி அலைந்து வரும் குடும்பங்களின் வலியையும் வேதனையையும் இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும்,

மனித உயிர்களின் மதிப்பை இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்க வேண்டியது ஒவ்வொரு நாகரிக சமூகத்தினதும் கடமையாகும். எனவே செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக சுயாதீனமான, வெளிப்படையான, நியாயமான மற்றும் நீதியான விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

காலம் தாழ்த்தப்படும் ஒவ்வொரு நாளும், உண்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் குடும்பங்களின் வேதனையை மேலும் அதிகரிக்கின்றது.

ஆகவே சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும், நீதித்துறை அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும், மனித உரிமை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறிவியல் ரீதியான விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

இந்த மனித எச்சங்கள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? அவர்களது குடும்பங்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு உரிய பதில்கள் கிடைக்க வேண்டும்.

உண்மையை மறைப்பதும், காலம் தாழ்த்துவதும் அல்லது விசாரணையை பலவீனப்படுத்துவதும் எந்தவொரு சமூகத்திற்கும் நீதியை வழங்காது.

போராலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பது நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் அடிப்படையாகும். உண்மையை அறியும் உரிமையும், நீதியைப் பெறும் உரிமையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படை மனித உரிமைகளாகும்.

எனவே செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும், எந்தவித அரசியல் அல்லது நிர்வாக தலையீடுகளுமின்றியும் முன்னெடுக்கப்பட்டு, காலம் தாழ்த்தாது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன். உண்மையை வெளிக்கொணர்வதே நல்லிணக்கத்தின் முதல் படியாகும்; நீதியை நிலைநாட்டுவதே நிலையான சமாதானத்தின் அடித்தளமாகும் என்று தெரிவித்துள்ளார்

Related

Tags: chemmanisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Next Post

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

Related Posts

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!
இலங்கை

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

2026-06-22
போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2026-06-22
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

2026-06-22
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் இருவர் கைது!

2026-06-22
அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை பறிமுதல்!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் தொகை பறிமுதல்!

2026-06-22
இலங்கையின் சுற்றுலா வருவாயில் சரிவு!
இலங்கை

இலங்கையின் சுற்றுலா வருவாயில் சரிவு!

2026-06-22
Next Post
வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

0
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

0
போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் இருவர் கைது!

0
வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

2026-06-22
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

2026-06-22
போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2026-06-22
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

2026-06-22
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

போதைப்பொருள் விற்பனை தொடர்பில் இருவர் கைது!

2026-06-22

Recent News

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிப்பதற்கு நடவடிக்கை!

2026-06-22
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தல்!

2026-06-22
போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2026-06-22
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

2026-06-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.