கடந்த பெப்ரவரி மாத இறுதியில் உலக அளவில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகமும், இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுத் தேவைகளும் இப்பாதையின் வழியாகவே கொண்டு வரப்படுகின்றன.
இத்தகைய இக்கட்டான சூழலில், இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிவைச் சந்திக்கும் எனப் பல சர்வதேச நிபுணர்களால் கணிக்கப்பட்டது.
எனினும், மத்திய அரசின் மிகத் தெளிவான, திட்டமிட்ட முன்கூட்டிய இராஜதந்திர நகர்வுகளால் இந்தியா இந்த இமாலய நெருக்கடியிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளது.
தனது கச்சா எண்ணெய் தேவையில் பத்தில் ஒன்பது பங்கையும், சமையல் எரிவாயுத் (LPG) தேவையில் பாதியளவுக்கும் அதிகமாகவும் வளைகுடா நாடுகள் வழியாகவே இந்தியா இறக்குமதி செய்கிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலையேற்றம் காரணமாக, இறக்குமதியோடு தொடர்புடைய 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் உண்மையான சந்தை விலை 1,600 ரூபாய் வரை உச்சம் தொட்டது.
இருப்பினும், சாமானிய மற்றும் ஏழை மக்களின் மீதான சுமையைக் குறைக்கும் நோக்கில், மத்திய அரசு வழங்கிய பாரிய மானியங்கள் காரணமாக, வீட்டு உபயோக சிலிண்டரின் விலை சுமார் 900 ரூபாயாகவே கட்டுக்குள் வைக்கப்பட்டது.
உலக நாடுகள் பலவும் கடுமையான எரிசக்திப் பற்றாக்குறையால் திணறி வரும் வேளையில், இந்தியாவின் இந்த முன்கூட்டிய திட்டமிடலும், சந்தையைக் கையாண்ட விதமும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















