மின்கட்டணம் எரிவாயு விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வாழ்க்கை சுமையினை குறைக்குமாறு கோஷங்களை எழுப்பியவாறு தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக பொரளை பகுதியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
இதேவேளை மின்கட்டணம் எரிவாயு விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக மாலபே பகுதியிலும் நேற்று இரவு தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது
















