முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

அந்தவகையில் குறித்த ஆலயத்தின் கருவறை, முருகன் சந்நிதானம், நாகதம்பிரான் சந்நிதானம், வசந்தமண்டபம், வைரவர் சந்நிதானம் என்பவற்றுக்கு புதிய கட்டடங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வே இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன் அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.












