மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில், இங்கிலாந்தும் இந்தியாவும் இன்று (14) பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மோதவுள்ளன.
இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 03.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டியில் அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்குத் திரும்புகின்றனர்.
அவர்களின் வருகையுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்திடம் 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, அந்தத் தோல்வியை ஈடுசெய்யும் வகையில் இந்த ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட முயற்சிக்கும்.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி 1974-இல் நடைபெற்றது; அன்று முதல் இதுவரை ஒருநாள் அரங்கில் அவை 110 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் இந்தியா 61 வெற்றிகளுடன் சிறப்பான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
அதேவேளையில் இங்கிலாந்து 44 வெற்றிகளுடன் அந்த இடைவெளியைக் குறைத்து வருகிறது.
மேலும், இரண்டு போட்டிகள் சமனிலும் , மூன்று போட்டிகள் கைவிடப்பட்டும் முடிந்துள்ளன.














