ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளைப் பிரிட்டிஷ் சிறப்புப் படையினர் வேடிக்கைக்காக ‘போர்க்லிஃப்ட்’ இயந்திரத்தின் மீது ஏற்றி, சித்திரவதை செய்ததாக ஆப்கானிஸ்தான் போர்க்குற்ற விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சிறப்புப் படையினரால் அப்பாவி விவசாயிகள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்துக் கேள்வி எழுப்பிய இராணுவ அதிகாரி ஒருவர், “தலிபான்களை நேசிக்கும் துரோகி” என சக அதிகாரிகளால் வசைபாடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் சிறப்புப் படைகள் புரிந்த போர்க்குற்றங்கள் மற்றும் அதனை மூடிமறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து லண்டனில் நீதிபதி தலைமையில் விசேட விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













