இந்தியாவின், புது டெல்லி – ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது பொலிஸார் நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கண்டனம் தெரிவித்து மாணவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களின் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படாத போது அவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே. எனவும் இத்தகைய நிலை மீண்டும் அவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் , தனது தந்தை ஒரு பேராசிரியர் எனக் குறிப்பிட்ட அவர், “தோல்வி அடைவது தவறில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு எனவும் குறுக்கு வழிகளை எப்போதும் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை தனது சிறு வயதிலேயே தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்தார்” என்றும் நினைவு கூர்ந்துள்ளார்.
















