வத்தளை, பள்ளியாவத்தை, கதிரான பாலத்துக்கு அருகிலுள்ள மண்டபம் ஒன்றில் நேற்று இரவு (23) நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கருப்பு நிற கரொன்றில் ஒன்றில் வந்த குழுவினர், நிகழ்ச்சி மண்டபத்தில் இருந்த ஒருவரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 39 வயதான சுமேத என்பவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திட்டமிட்ட குற்றக் குழுவின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் குடு ரோஷான் என்பவரின் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மண்டபத்தில் நடைபெற்ற நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடியவரே துப்பாக்கிச் சூட்டின் இலக்காக இருந்திருக்கலாம் என்றும், இலக்கு தவறி அங்கு இருந்த மற்றொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கருப்பு நிற கார் , ஜா-எல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முரண்பாடே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.














